நெல்லை பாஜக நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது.!!
Nellai BJP executive arrested in gondas
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நெல்லை டவுனில் இருந்து மணக்கொடை வீடு என்ற இடத்திற்கு சென்ற அரசு நகரப் பேருந்தை மரித்த பாஜக நிர்வாகி மருத பாண்டி என்பவர் பேருந்தின் முன் கண்ணாடியில் பாஜக ஆதரவு தேர்தல் ஸ்டிக்கரை ஒட்ட முயன்று உள்ளார். அதனை அரசு பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணியன் தடுக்கும் முயன்றதை அடுத்து அவரது தலையில் சோடா பாட்டிலால் ஆவேசமாக தாக்கிய மருதுபாண்டி தலைமறைவானார்.
படுகாயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மருது பண்டியை கைது கைது செய்தனர்.
இந்த நிலையில் மருது பாண்டியன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி நெல்லை மாநகர் காவல் ஆணையர் மூர்த்தி பிறப்பித்த உத்தரவின் பெயரில் அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Nellai BJP executive arrested in gondas