விருத்தாச்சலம் || பட்டாக்கத்தியுடன் பிடிபட்ட இளைஞர்கள்.! முடியை வெட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார்.! - Seithipunal
Seithipunal


நேற்று நள்ளிரவு கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் மது போதையில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் இரண்டடி நீளம் கொண்ட பட்டாக்கத்தியை தரையில் தேய்த்து தீப்பொறி பறக்க, பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் பேருந்து நிலையத்திற்கு விரைந்த சென்ற காவல்துறையினரைப் பார்த்து இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பித்துச் சென்றனர். அவர்களைத் துரத்தி பிடித்த காவல்துறையினர், இளைஞர்களை கைது செய்தனர். 

இதையடுத்து, போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் விருத்தாச்சலம் மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார், மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தன் என்பவரின் மகன் சுபாஷ் சந்திரபோஸ் என்பது தெரிய வந்தது. அதன் பின்னர் அவர்கள் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

மேலும் பட்டாகத்தியைக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள் இருவரும் தலை முடியை பல விதமான மாடலில் வைத்திருந்ததால்,காவல் துறையினர் முடி திருத்துபவரை வரவழைத்து முற்றிலுமாக தலையில் இருந்த முடியை வெட்டினர். பிறகு அவர்களைக் குளிப்பாட்டி  நீதிபதியிடம் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near viruthachalam two young mans arrested in bus stand


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->