திருவள்ளூர் : ஏற்கனவே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை கர்பமாக்கிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் எபிநேசர். தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் எபிநேசர் தன்னுடன் உடன் வேலைபார்த்து வரும் இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்தார். நாளடைவில், அந்த பெண்ணை காதலிப்பதாக தெரிவித்து ஆசையாக பேசி வந்துள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய அந்த இளம்பெண்ணும் எபிநேசருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இதற்கிடையே கர்ப்பமான அந்த பெண் எபிநேசரிடம் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். 

அப்போது, எபிநேசர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிவித்து அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் படி, போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து எபிநேசரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tiruvallur man arrested for sexuall harassment case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->