திருத்தணி || கல்லூரி மாணவர்களுக்கிடையே சரமாரியாக தாக்குதல்.! தீவிர விசாரணை செய்யும் போலீசார்..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்நிலையில், கல்லூரிக்கு வழக்கம் போல் வருகை தரும் முதல் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் திடீரென கல்லூரி வளாகத்தில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். 

இம்மாணவர்கள் தாக்கி கொண்டதை பார்த்த மாணவிகள் அலறியடித்து ஓடினர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி வகுப்புகளுக்குள் அனுப்பிவைத்தனர். 

இதைத்தொடர்ந்து, மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலவரம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thiruthani college students fight


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->