#BREAKING : திருப்பதி அருகே செம்மரக்கட்டை கடத்தல்.. தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதி அருகே செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் செம்மரக்கட்டையை கடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எர்ரவாரி பாளையம் பகுதி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கடத்தல் காரர்களை கைது செய்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சங்கர் என்பவர் கடப்பா மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.71 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Near Thirupathi semmarakattai smuggling 10 tamilans arrested


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->