தேனியில் பெற்ற தந்தையை கொலை செய்த மகன் உள்பட இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே பொம்முராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி தேவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 

இதற்கிடையே தேவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர், இளங்கோவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

இவர் அடிக்கடி குமணன்தொழு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவார். அதன்படி நேற்று இரவு தனது அக்கா வீட்டிற்குச் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்துக் கொண்டிருந்தார். 

இதையடுத்து, இளங்கோவன் காமன் கல்லூர் அருகே வந்துகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து சாலையோரம் வீசிச் சென்றனர். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளங்கோவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், இளங்கோவனை அவரது மகன் விக்ரம் மற்றும் அக்கா மகன் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கொலை செய்தது உறுதியானது. 

அதன் படி போலீசார் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கொலை செய்ததை ஒத்துக்கொண்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். பெட்ரா தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near theni son arrested for kill father


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->