ஸ்ரீரங்கம் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 8 பேருக்கு உடல்நலக் குறைவு..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் முப்பது குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் இந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளில் எட்டு பேருக்கு இன்று திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காப்பகத்தின் நிர்வாகத்தினர், அந்த குழந்தைகளை உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தைகளின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே போலீசார் குழந்தைகளுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் காப்பகத்திற்குச் சென்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பால் மற்றும் உணவு போன்றவற்றின் மாதிரிகளை எடுத்து ஆய்விற்கு அனுப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near sri rangam eight childrens affected health issue in children care home


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->