பொள்ளாச்சியில் பரபரப்பு.! சிறுமியிடம் அந்தரங்க வீடியோவைக் காட்டி மிரட்டிய வாலிபர் கைது.!
near pollachi man arrested for threat to girl
ஈரோடு மாவட்டம் பொள்ளாச்சி அருகே வாலிபர் ஒருவர் பதினாறு வயது சிறுமியை, கடந்த ஒராண்டாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்றுள்ளார்.
அங்கு, அந்த வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து, அந்த சிறுமியையும் மிரட்டியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி செய்வதறியாது திண்டாடி வந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் படி, போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து, போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near pollachi man arrested for threat to girl