ஓசூரில் அமையும் தமிழகத்தின் 17 வது வனவிலங்கு சரணாலயம்.!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சுமார் 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்த காட்டுப்பகுதியை தமிழக அரசு "காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்" என்று அறிவித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 

இந்த சரணாலயம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அஞ்செட்டி, ஜவள கிரி, ஊரிகரம் உள்ளிட்ட சரகங்களை உள்ளடக்கி அமைகிறது. காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியாக அமைய இருக்கும் காவிரி தெற்கு சரணாலயம் தமிழ் நாட்டின் 17வது வன விலங்கு சரணாலயமாக அமைகிறது. 

இந்த வனவிலங்கு சரணாலயம் குறித்து முதமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தைத் தமிழ்நாட்டின் 17வது காட்டுயிர்க் காப்பகமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near osoor tamilnadu 17th Wildlife Sanctuary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->