கொடிக்கம்பம் விழுந்து அதிமுக தொண்டர் உயிரிழந்த சம்பவம் - இரண்டு பேர் கைது.!
near maduranthagam two peoples arrested for aiadmk flagpole fell down people died case
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 100 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க. கம்பத்தில் கொடி ஏற்றினார். சமீபத்தில் அந்த கொடி கம்பம் சேதம் அடைந்திருந்தது.
இந்நிலையில், நேற்று அந்த கோடி கம்பத்தை மாற்றுவதற்கு பணி நடைபெற்றது. அப்போது அந்த கொடிகம்பத்தை நிலை நிறுத்தும்போது திடீரென இரண்டாக உடைந்து பணியில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க. தொண்டரான மதுராந்தகம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பன் என்பவர் மீது விழுந்தது.
இதில் செல்லப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மதுராந்தகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அதிமுக நிர்வாகி சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் உள்ளிட்டோரை இன்று கைது செய்தனர்.
English Summary
near maduranthagam two peoples arrested for aiadmk flagpole fell down people died case