கன்னியாகுமரி : காதலியை சந்திக்க பர்தா அணிந்து சென்ற வாலிபர்.! எச்சரிக்கை விடுத்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியின் அருகே பர்தா அணிந்தபடி, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் சுற்றி வருவதை, கல்லூரியில் பணிபுரியும் காவலாளிகள் கவனித்துள்ளனர். 

இதையடுத்து காவலாளிகள் அவரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து வந்தது தெரியவந்தது. அதன் பின்னர் அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி, போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று அந்த இளைஞரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், அந்த வாலிபர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும், அவர் தனது காதலியை நேரில் பார்த்து பேசுவதற்காக பர்தா அணிந்து வந்ததும் தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து வாலிபரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, அவரது பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், வாலிபருக்கு எச்சரிக்கை விடுத்து, அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kanniyakumari young man met girl friend with burda in college


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->