காஞ்சிபுரம் || வாலஜாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிலிண்டர் குடோன் நடந்தது என்ன?.
near kanchipuram cylidar gudone fire accident
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலிண்டர் குடோன் ஒன்று இயங்கி வருகிறது.
இங்கிருந்து சிலிண்டர்கள் கிராம பகுதிகளுக்கும், நகர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதனால் சிலிண்டர்கள் அனைத்தும் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் குடோனில் இருந்த எட்டு பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில், மொத்தம் 20 பேருக்கு குறைந்த சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக குடோன் இருக்கும் பகுதிக்குச் சென்று தீ விபத்தில் சிக்கி இருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த குடோன் இருக்கும் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளி பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
குடோனில் இருந்து சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near kanchipuram cylidar gudone fire accident