ஈரோடு || களைகட்டிய சாணியடி திருவிழா.! உற்சாகத்தில் இளைஞர்கள்.!
near erode Chaniyadi festival
இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி அடுத்த குமிட்டாபுரம் பகுதியில் பாரம்பரிய நிகழ்வான சாணியடி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் கர்நாடக மாநில இளைஞர்கள் கலந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசிக்கொண்டனர்.
இந்த சாணியடி திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தீபாவளியை அடுத்த மூன்றாவது நாளில் இந்த திருவிழாவானது நடைபெறுவது வழக்கம்.
இதில் பயன்படுத்தும் சாணத்தை சில நாட்களுக்கு முன்பாகவே மக்கள் மாட்டுக் கொட்டகையில் சேமித்து வைத்து, அதனை டிராக்டர் மூலம் கொண்டுவந்து கோவில் வளாகத்திற்கு முன்பு உள்ள திடலில் கொட்டி வைக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் கோவிலில் சாமியை வழிபட்டவுடன் உற்சவரை கழுதை மீது ஏற்றி வைத்து தெப்பக்குளத்திலிருந்து கோவிலுக்கு அழைத்து வருகின்றனர். அதையடுத்து திடலில் கொட்டி வைக்கப்பட்டுள்ள சாணத்தை இளைஞர்கள் மாறி மாறி ஒருவருக்கொருவர் தூக்கி வீசிக் கொள்கின்றனர்.
இதனால் மக்கள் நோயின்றி வாழ்வார்கள் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் காலங்காலமாக, பாரம்பரியமாக இவ்விழாவை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திருவிழாவில் பயன்படுத்தப்படும் சாணம் விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
English Summary
near erode Chaniyadi festival