கடலூர் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை - தீவிர விசாரணையில் போலீசார்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்து விட்டது. இதையடுத்து, சென்னைக்கு வேலை சென்ற அவருக்கு அங்கு மிஸ்பசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 

சில நாட்களுக்குப் பிறகு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹெலன்கிரேஸ் என்ற ஒரு மகளும் உள்ளார்.இந்நிலையில், இவர் கடந்த 27-ந்தேதி தனது மனைவி மிஸ்பசாந்தி, மகள் ஹெலன்கிரேஸ் மற்றும் மாமியார் தெபோரால் கல்யாணி ஆகியோரை சொந்த ஊரான மலையனூருக்கு அழைத்து வந்து வாடகை வீட்டில் இருந்து வந்தார். 

நேற்று இரவு சிவகுருநாதன் அனைவருக்கும் ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மனைவி, மகள் மற்றும் மாமியார் மூன்று பேரும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அவர்களை தேடினார். ஆனால் இரவு முழுவதும் தேடியும் அவர்கள் காணவில்லை.

இதையடுத்து, இன்று காலை அதே பகுதியில் வேல்முருகன் என்பவரின் விவசாய கிணற்றில் மிஸ்பசாந்தி, ஹெலன்கிரேஸ், தெபோரால் கல்யாணி உள்ளிட்ட மூன்று பேரும் பிணமாக மிதந்ததை கண்டு சிவகுருநாதன் அதிர்ச்சியடைந்தார். அதன் பின்னர் மூன்று பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தாய், மகள், பேத்தி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near cuddalore three peoples sucide in well


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->