கடலூர் || மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்த தந்தை மகன்.! சோகத்தில் கிராம மக்கள்..!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே சிறுபாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி. இவரின் மனைவி பெரியம்மா. இவர் நேற்று இரவு துணிதுவைத்து அதனை காய வைப்பதற்காக வீட்டின் வெளிபுறம் உள்ள கம்பியில் தொங்கவிட்டார். அப்போது பெய்த பலத்த மழையினால் கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது. 

இதை கவனிக்காமல் கம்பியை தொட்டதனால், மின்சாரம் பாய்ந்து  பெரியம்மா தூக்கி வீசப்பட்டார். மனைவியின் அலறல் சத்தம்கேட்டு கணவர் ஆறுமுகம் ஓடிவந்து தனது மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

இதையறிந்த, ஆறுமுகத்தின் மகன் மணிகண்டன் தனது பெற்றோரை காப்பாற்ற முயன்றபோது, அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

இந்த சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது, மூன்று பேரும் மயங்கி கிடந்துள்ளனர். பின்னர் மூவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன், ஆறுமுகம் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பெரியம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையம், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near cudaloore father son died


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->