சென்னை அருகே பேருந்து நடத்துனரைத் தாக்கிய இளம்பெண் - வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ.!
near chennai young woman attack bus conductor
சென்னை அருகே உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் அனிதா. இவர், மயிலாப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரம்பூர் செல்வதற்காக பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி வந்த மாநகர பேருந்து ஒன்றில் ஓடிச்சென்று ஏறினார்.
இதை பார்த்த பேருந்து நடத்துனர் செல்வக்குமார் அனிதாவை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த இளம்பெண் நடத்துனரை திட்டியபடியே பேருந்தில் பயணம் செய்தார்.
இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த நடத்துனர் பெரம்பூர் பேருந்து நிறுத்தத்தில் அந்த பெண்ணை பேருந்தை விட்டு கீழே இறங்கும்படிதெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் திடீரென நடத்துனரைத் தாக்கினார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த நடத்துனர் பதிலுக்கு அந்த இளம்பெண்ணைத் தாக்கினார். இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் நடத்துனர் மற்றும் இளம்பெண் என்று இருவரிடமும் தனித்தனியாக புகாரை பெற்று கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near chennai young woman attack bus conductor