பிரியாணி கேட்ட மனைவியை தீ வைத்து எரித்த கணவன்.! கணவனை கட்டி அணைத்த மனைவி.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அயனாவரம் தாகூர் நகரைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் ஒரு ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவர் மனைவி  பத்மாவதி. இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர். 

இதையடுத்து, நான்கு பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவரவர் தனித் தனியாக வசித்து வருகின்றனர். அதேபோல், கருணாகாரனும் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். வயது முதிர்வின் காரணமாக பத்மாவதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால், பிள்ளைகள் மவீட்டிலும் தாங்காமல் சண்டை போட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்துவிடுவார். இதே போல் கணவன், மனைவிக்கு இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருவரும் பேசாமலும் இருந்து வந்துள்ளனர். இதனால், கருணாகரன் தனது மனைவி பத்மாவதிக்கு சரியாக சாப்பாடு வாங்கி கொடுப்பதில்லை என்றுத் தெரியப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு கருணாகரன் மட்டும் பிரியாணி வாங்கி வந்து தனியாக சாப்பிட்டுள்ளார். அப்போது பத்மாவதி தனக்கும் பிரியாணி வேண்டும் என்றுக்  கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கருணாகரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து பத்மாவதி மீது ஊற்றி தீவைத்துள்ளார். 

இதில் பற்றி எறிந்த பத்மாவதி உடனே தீயுடன் ஓடிவந்து கருணாகரனை கட்டி பிடித்ததனால், இருவரும் தீயில் எரிந்து பலத்த காயமடைந்தனர். இதனால் அவர்களது வீட்டிலிருந்து புகையாய் வந்தது. இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அவர்களது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இருவரும் தீயில் எறிந்தவாறு நின்றனர்.

இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துபோலீசார் தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பத்மாவதி 40 சதவீத தீக்காயங்களுடனும், கருணாகரன் 20 சதவீத தீக்காயங்களுடனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

இதில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் கருணாகரனும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai husband kill wife for biriyani


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->