ஓடும் ரெயிலில் இருந்து ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


சென்னை மீஞ்சூர் அருகே கரையான்மேடு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகள் கனிமொழி. இவர், சென்னையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் அவர், நேற்று வழக்கம்போல கல்லூரிக்குச் சென்று விட்டு சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரெயிலில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இதையடுத்து அந்த மின்சார ரெயில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. 

அப்போது, கனிமொழி தன் காதலனுடன் போன் பேசியபடி வந்துள்ளார். திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த  மாணவி கனிமொழி, ரெயிலில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதில் நீரில் மூழ்கிய கனிமொழி பரிதாபமாக உயிரிழந்தார். இதை கவனித்த அப்பகுதி மீனவர்கள் சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று ஆற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மாணவி கனிமொழி மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai college student jumb down on kosasthalai river sucide


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->