வாட்ஸப்பில் போட்டோ.. வாடகை வீட்டில் உல்லாசம்.. நாகர்கோவிலில் பகீர்.!!
Nagarcoil Prostitution police investigation
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக வீடு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நாகர்கோவில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியிலேயே பாலியல் தொழிலில் நடைபெற்று வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அரைநிர்வாணத்துடன் இருந்த 3 பெண்கள் மற்றும் அவர்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த ஜோசப், மகேஷ், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வெளிமாவட்டத்தில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து, அவர்களின் புகைப்படத்தை வாட்சப் மூலமாக வாடிக்கையாளருக்கு அனுப்பி வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Nagarcoil Prostitution police investigation