சுங்கச்சாவடியில் நாம் தமிழர் கட்சியினர் அத்துமீறல்..! போலீசார் வழக்கு பதிவு..!
Naam Tamilar Katchi Member violent In Tollgate
தமிழகத்தில் செங்கல்பட்டு அருகே சுங்கக்கட்டணம் கேட்ட காரணத்தால் நாம் தமிழர் கட்சியினர் பூத் கண்ணாடியை உடைத்து அத்துமீறி உள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சினர் மூன்று கார்களில் சென்னை நோக்கி பயணித்து கொண்டிருந்தார்கள். அப்போது செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், நாம் தமிழர் கட்சியினரிடம் ஊழியர்கள் சுங்க வரி கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கட்டணம் வசூலிக்கும் பூத் கண்ணாடியை உடைத்தார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
கண்ணாடியை உடைத்து விட்டு நாம் தமிழர் கட்சியினர் சென்னை நோக்கி புறப்பட்டனர். இந்த மோதலால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
Naam Tamilar Katchi Member violent In Tollgate