சீக்கிரம் 'அதை' எடுத்து போடு! சும்மா போன மனுஷன இப்படியா? நைட் சரக்கு பார்ட்டியில் நடந்த களேபரம்!! - Seithipunal
Seithipunal


ல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் ராதாகிருஷ்ணன் சாலையில் நள்ளிரவு நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது போதையில் பேசிக் கொண்டிருந்த ஐவரும் திடீரென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் எதிரில் சிவனேனு வந்து கொண்டிருந்த நபரை வலுக்கட்டாயமாக நிறுத்தி கத்தியால் குத்தியுள்ளார். இவர்களது இந்த செயலை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயற்சித்துள்ளனர்.

இந்த நிலையில், பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க வெடிகுண்டை வீசி விட்டு தப்பி ஓடி விட்டனர். மேலும், கத்தியால் குத்துப்பட்ட அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் குத்துப்பட்ட நபர் பொழிச்சலூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக சூரியா என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious group attacked by bomb


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->