குறிஞ்சிப்பாடி டாஸ்மாக் அருகே வாலிபர் வெட்டிக்கொலை.! மர்ம கும்பலின் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுந்தரமூர்த்தி (39). இவர் அதே பகுதியில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சுந்தரமூர்த்தி வழக்கம்போல் ஸ்டுடியோவை மூடிவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது குறிஞ்சிப்பாடி டாஸ்மாக் அருகே வந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் எதிர்பாராதவிதமாக திடீரென சுந்தரமூர்த்தியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சுந்தரமூர்த்தி உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சுந்தரமூர்த்தியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious gang who murder young man in Cuddalore kurinchipadi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->