கொருக்குப்பேட்டையில் பரபரப்பு.! ஓட ஓட விரட்டி ரவுடியை வெட்டிய மர்ம கும்பல்.! - Seithipunal
Seithipunal


சென்னை கொருக்குப்பேட்டையில் ஓட ஓட விரட்டி ரவுடியை வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜனார்த்தனன்(33). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதி அருகே ஜனார்த்தனன் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்ப கும்பல் ஒன்று அவரை வழிமறித்து வெட்ட முயன்றுள்ளது. அப்பொழுது அவர்களிடம் இருந்து ஜனார்த்தனன் தப்பி ஓடி உள்ளார். இருப்பினும் அவர்கள் ஜனார்த்தனனை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியுள்ளனர். 

இதையடுத்து இவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பலத்த காயமடைந்த ஜனார்த்தனனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஜனார்த்தனனை வெட்டிய மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious gang chased and hacked the rowdy in chennai korukkupet


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->