கொடூர கொலை வழக்கில் நேரில் ஆஜரான திமுக எம்பி! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு நீதிமன்றத்தில், கொலை வழக்கில் கடலூர் திமுக எம்பி இன்று ஆஜராகி உள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பண்ருட்டியை முந்திரி தொழிலாளியும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவருமான கோவிந்தராசு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கடலூர் திமுக எம்பி ரமேஷ்-க்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு அடித்தே கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலையை செய்தது திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தான் என்று, அவரின் மகன் குற்றம் சாட்டினார்.

பின்னர், பாமக கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக திமுக எம்பி கைது செய்யப்பட்டார். 

இந்த கொலை வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நிலைகள் திமுக எம்பி ரமேஷ் செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி உள்ளார்.

தொழிலாளி கோவிந்தராசு கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder case Cuddalore DMK MP Ramesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->