மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் பரணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (45). இவர் நேற்று பெரியகருக்கை பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக குமார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் இரண்டு பேரும் படுகாயமடைந்த நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆண்டிமடம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Motorcycles accident in Ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->