மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சீனிவாசன் (27). இவர் திருவள்ளூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்பொழுது ஊத்துக்கோட்டை புதிய மேம்பாலம் அருகே சென்ற போது, நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சீனிவாசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பென்னலூர்பேட்டை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Motorcycle lorry accident in tiruvallur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->