தூத்துக்குடி: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் வி.எம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (21). இவர் தூத்துக்குடி சேரகுளத்தில் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு காளிதாஸ், திருநெல்வேலி இட்டடி அருகே இருசக்கர வாகனத்தை பழுது பார்த்துவிட்டு மீண்டும் ஒர்க் ஷாப் நோக்கி மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது சிரியந்தூர் பகுதியில் சென்றபோது, முன்னாள் சென்ற லாரியை காளிதாஸ் முந்த முயன்றபொது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

இதில் காளிதாசன் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காளிதாஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Motorcycle lorry accident in Thoothukudi


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->