மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு.!
Motorcycle car accident in Villupuram
விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி பொறையூர் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் செல்வகார்த்திக்(30). இவரும், இவரது நண்பரான அப்பகுதியை சேர்ந்த ராகவனுடன்(17) மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது வானூர் வாழப்பட்டம் பாளையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ராகவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Motorcycle car accident in Villupuram