திருநெல்வேலி: மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 மாணவர்கள் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள நெரிஞ்சி காலணி பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் சுனில் மாணிக்க பிரபு (17). இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஜான்சனும்(17), சுனில் மாணிக்க பிரபுவும் பணகுடியில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது தண்டையார்குளம் அருகே சென்ற போது, மற்றொரு மோட்டார் சைக்கிள் சாலையின் குறுக்கே சென்றதால், இவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் நிலைத்தடுமாறிய நிலையில், இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Motorcycle accident in Tirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->