செல்போனில் பேசியதை கணவனிடம் சொல்லிய மகள், தாய் செய்த கொடூர செயல்..! - Seithipunal
Seithipunal


பெற்ற மகளை அடித்து கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்து விசாரணாய் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவியும்  பிரசன்னதேவ் என்ற மகனும் ரித்திகா என்ற மகளும் உள்ளனர். சம்பவதன்று, சுகன்யா மகளை சரமாரியாக தாக்கியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகன்யாவை கைது செய்த அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பூபாலன் வேலைக்கு சென்ற பின் சுகன்யா யாருடன் போன் பேசுகிறார் என்பதை ரித்திகா தந்தை மற்றும் அத்தையிடம் கூறியுள்ளார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், குழந்தை மீது கோபத்தில் இருந்த அவர் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother Killed His Daughter In Thiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->