பாட்டியான பின்னும், தீராத மோகம்.! மகளையே தீர்த்துக்கட்டிய சோகம்.! ஆசை யாரை விட்டது.?!
Mother arrested who killed her daughter
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசித்து வந்தவர் 30 வயதான எஸ்தர் பேபி. இவருடைய தாயார் சகாயராணி. எஸ்தருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருக்கின்றன. கடந்த 2014 ஆம் தேதி கணவருடன் தகராறு ஏற்பட்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார்.
இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு தனது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் அந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் திருப்பூரில் சேவியர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விசாரித்த பொழுது அவர் சகாய ராணியின் தம்பி என்பது தெரியவந்துள்ளது.
மேலும், தாய் சகாயராணியின் கள்ளக்காதலுக்கு மகள் எஸ்தர் பேபி தடையாக இருந்ததால், அவரை கள்ளக்காதலன் பாண்டியராஜன், சகாயராணி மற்றும் தம்பி சேவியர் ஆகியோர் கொலை செய்து வீட்டிலேயே புதைத்து உள்ளது தெரியவந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் மேற்கூறிய தகவல் வெளியான நிலையில், இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother arrested who killed her daughter