வயிற்றுபோக்கால் ஒரே கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.. இருவர் பலி..! - Seithipunal
Seithipunal


ஒரே கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பேரையூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இந்நிலையில் முனுசாமி (50) , ஏழுமலை என்ற இரு முதியவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த கிராமத்தில் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடைகளில் விற்கப்படும் துரித உணவுகளால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதா என்பதை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அந்த கிராமத்தில் உள்ள குடிநீர் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  குடிக்கவும் கடைகளில் விற்கப்படும் உணவுகளை தவிர்க்கவும் சுகாதாரத்துறையினர் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 20 people from the same village were admitted to the hospital due to diarrhea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->