சிவசங்கர் பாபா மீது குவியும் பாலியல் புகார்கள் - Seithipunal
Seithipunal


சிவசங்கர் பாமா மீது  வெளிநாடுவாழ் மாணவிகள்  5 பேர் பாலியல் புகார் தெரிவித்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

 சென்னை சுஷில்  ஹரி பள்ளியின் பாலியல் பலாத்காரம் நடப்பதாக மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின்  நிறுவனர் சிவசங்கர் பாபா  போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தற்போது உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே  சிவசங்கர் பாபா தொடர்பாகவும் பள்ளியின் செயல்பாடுகள் தொடர்பாகவும் ஆதரங்களை திரட்ட அப்பள்ளியின் மாணவிகள், ஆசிரியர், பணியாளர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அப்பள்ளியில் படித்து விட்டு, வெளிநாட்டில் வசிக்கிற 5 மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில மாணவிகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் 5 பேர் புகார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More Sexual Complains of Shivashankar Baba


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->