பணம் பெருகி, செல்வம் கொழிக்க முன்னோர்களின் ரகசியம்.. அக்கம் பக்கம் தெரியாமல் இதை செய்தால் போதும்.!
Money making secret to grow as billion
இன்றைய காலம் மட்டுமல்ல மனிதன் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை, மனிதன் உருவானதிலிருந்து இருந்து வருகிறது. அதற்காக பலரும் பல்வேறு வழிகளில் உழைத்து வருவார்கள்.
கடின உழைப்பு பணத்தை அதிகமாக சேர்க்க அவசியம் தான் என்றாலும், அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால்தான் அந்தப் பணத்தை நம்மிடம் தக்க வைத்துக் கொள்ளவும், பெருக்கவும் முடியும் என்று பலரும் நம்புகிறார்கள்.
அப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை நம்முடன் தக்க வைத்துக் கொண்டு எப்படி வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று இப்போது காணலாம்.
நாம் வசிக்கின்ற வீட்டிற்கு அருகில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் எட்டு திசைகளில் உள்ள ஊர்களில் இருந்து கடல், குளம், ஏரி மற்றும் ஆறு ஆகிய நீர் நிலைகளில் இருந்து ஒரு செப்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து நம்முடைய வீட்டின் எட்டு மூலைகளிலும் புதைத்து வைக்க வேண்டும்.
அப்படி அந்த நீரை புதைக்கும் போது அதனுடன் வில்வ இலை, நெல்லிமர இலை, கொம்பு மஞ்சள் உள்ளிட்டவற்றை சேர்த்து புதைக்க வேண்டும்.
இவ்வாறு புதைத்த பின் நாம் எந்த கிழமையில் அந்த செம்புகளை புதைத்தோமோ அதே கிழமையில் நமது வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றி நம் குலதெய்வத்தை நினைத்து பூஜை செய்து வணங்க வேண்டும்.
அவ்வாறு வணங்கினால் நம் வீட்டில் செல்வம் பெருகி விரைவில் பணம் பொருள் சேர்ந்து பணக்காரர்களாக முடியும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.
இந்த ரகசியத்தை செய்யும் பொழுது உங்கள் வீட்டில் வாழ்க்கைத் துணையைத் தவிர மகன், மகள் போன்ற சிறுவர், சிறுமியர்களிடம் தெரிவிக்கக் கூடாது ஏனெனில் இதை ரகசியமாக செய்ய வேண்டும். அப்போதுதான் இதற்கான பலன் கிடைக்கும்.
English Summary
Money making secret to grow as billion