பரிதாபமாக போன உயிர்! மூடி மறைக்க எரித்த கொடூரம்! சிக்கலில் சிக்கியுள்ள ஓபிஎஸ் மகன்!! - Seithipunal
Seithipunal


மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை! நிலத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த சொர்க்கம் கோப்பை வனப்பகுதிக்கு அருகே தேனி தொகுதி எம்பியும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகனமான ரவிந்திரநாத் அவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டமானது வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் அதைச் சுற்றி மின்வெளி அமைத்துள்ளனர். 

இன்னிலையில் மின்வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்து உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவசரகதியில் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். 

பின்னர் அதே இடத்தில் குழி தோண்டி சிறுத்தையை புதைக்காமல் எரித்ததாக கூறப்படுகிறது. சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் நிலத்தின் உரிமையாளரான தேனி தொகுதி எம்பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்காமல். அந்த தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டு மந்தை வைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தோட்டத்திற்கு மின்வேலி அமைத்த நில உரிமையாளர் ரவீந்திரநாத் எம்பி மீது நடவடிக்கை எடுக்காமல் தற்காலிகமாக ஆட்டுப்பந்தை வைத்த விவசாயின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் நில உரிமையாளரான தேனி எம்பி ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Miserable life cover up the brutality OPS son in trouble


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->