வட, தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் தி.மு.க. தீவிர ஆலோசனை! - Seithipunal
Seithipunal


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, 

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கான கழக மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் இன்று வட சென்னை மற்றும் தென் சென்னை மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் மாவட்ட அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கள நிலவரம், நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, தேர்தல் முன்னேற்பாடு பணிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. 

வருகின்ற பாராளுமன்ற தேர்தலை இந்தியாவின் மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாக வட சென்னை தென் சென்னை தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றியடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister Udayanidhi Stalin tweet


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->