செந்தில்பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை வெளியானது!
Minister Senthilbalaji heart Operation
செந்தில் பாலாஜியின் இதயத்தின் ரத்தக்குழாயில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக ஆஞ்சியோ சோதனையில் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அதிகாலை அமலாக்கத்துறையின் துறையினரால் கைது செய்யப்பட்டார். சுமார்17 மணி நேரத்துக்கு மேலாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கத்தி, கதறி அழுது கூச்சலிட்டதால், பாதுகாப்பு படையினர் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பசிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சோதனை நடத்தப்பட்டது.
அதில், அவருக்கு இதய ரத்தக் குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
English Summary
Minister Senthilbalaji heart Operation