#BREAKING || அறுவை சிகிச்சைக்கு பின் கண் விழித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர் குழுவால் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக அவர் மயக்க நிலையில் இருந்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் "அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருந்து வருகிறது. தற்போது அவர் சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது கண் விழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்த மயக்கவியல் மருத்துவர்கள் அவரின் கருவிழி சுழற்சி சரியாக இருப்பதாக பரிசோதனை செய்ததில் தெரிய வந்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருவிழி சுழற்சி சீராகவும், சரியான முறையில் செயல்படுவதாகவும், இதயத்துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவக் குழு கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாக காவிரி மருத்துவமனை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthil Balaji woke up after surgery


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->