#சற்றுமுன் || 13 இராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் வாகனம் விபத்து.! அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் அமரர் ஊர்தியில் ஒன்று விபத்துக்கு உள்ளாகி இருப்பது பெரும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் கடந்து சாலை மார்க்கமாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது. ஒரு வளைவில், முன்னாள் பாதுகாப்பு பணிக்கு சென்று கொண்டிருந்த போலீசார் வாகனத்தின் மீது இந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து வாகனத்தில் இருந்த ராணுவ வீரரின் உடலை பத்திரமாக எடுத்து, மற்றொரு அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்ட தற்போது அந்த வாகனம் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இருந்தபோதிலும் ராணுவ வீரரின் உடலை எடுத்துச் செல்லும் இந்த வாகனம் விபத்துக்குள்ளாகி இருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கல்லாடு பகுதியில் இந்த வாகனங்கள் கடந்து இருந்தபொழுது, பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் வாகனமொன்று பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது. குன்னூர் அருகே பார்லி (இடம் சரியான தகவல் இல்லை) வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மலையின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில், அந்த வாகனத்தில் பயணித்த 12 காவலர்களில் 7 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக நான்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

METTUPALAIYAM POLICE VAN ACCIDENT


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->