அரியலூர்: கொரோனா வார்டில் இருந்த நபருக்கு ஏற்பட்ட சோகம்.! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.!  - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம், கடம்பூர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி(60) என்ற நபர் கேரளாவில் வேலை செய்து வந்தார். 

அங்கு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தவுடன் அவர் தனது சொந்த ஊரான அரியலூருக்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு அவருக்கு காய்ச்சல் இருந்ததால் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வரும் நபர்களை மருத்துவக் குழு தனிமைப்படுத்துவது போலவே இவரையும் தனிமை பிடித்து வைத்திருக்கின்றனர். 

ஆனால், இவர் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவரின் ரத்த மாதிரிகள் கடந்த 7ஆம் தேதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது.

ஆனால், நாராயணசாமி அவர் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து போயினர். 

உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Men suicide in ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->