மலேசியாவில் தமிழக இளைஞர் சித்ரவதை - மீட்டுத் தரக் கோரி கதறும் பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி அருகே நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சக்திவேல். இவர் சிவகங்கை இளையான்குடி பகுதியைச் சேர்ந்த ஏஜெண்ட் ராம்நாத் என்பவர் மூலமாக கடந்த 2015-ஆம் ஆண்டு மலேசியா சென்று புகாரி என்பவரது உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சக்திவேல் கடந்த 2022-ம் ஆண்டு சொந்த ஊருக்குத் திரும்பவேண்டும் என்று வேலை பார்த்த உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ஹோட்டல் உரிமையாளர், சக்திவேலின் பாஸ்போட்டை பிடுங்கி வைத்ததுடன் சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 

மேலும் சக்திவேலை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதையும் செய்து வந்துள்ளார். அவரது நிலையை கண்டு வேதனையடைந்து சக ஊழியர் ஒருவர் இந்தத் தகவலை யாருக்கும் தெரியாமல் வீடியோ கால் மூலம் சக்திவேலின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேலின் பெற்றோர் தங்கள் மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayiladuthurai youth tortured in maleysia


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->