ஆட்சி மாறியதும் சம்பவம்.. திமுக நிர்வாகியால் பூச்சிமருந்தை குடித்த பெண்... தாய் கண்ணீர் பேட்டி.!
Mayiladuthurai Kuthalam DMK Admin Abuse Words Argue with Woman she Suicide Feeling sad
குத்தாலத்தில் திமுக நகர செயலாளர் அவதூறாக பேசியதால், பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சோகம் அரங்கேறியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தலாம் மாநகராட்சியில், நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய 4 பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 7 வருடமாக ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்ததும் இவர்கள் 4 பேரும் கடந்த ஜூலை மாதம் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டு, திமுகவை சார்ந்தவர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நதியா திமுக நகர கழக செயலாளர் ஹம்சுதீனை சந்தித்து மீண்டும் பணி வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.
பெண்ணின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத திமுக நிர்வாகி, அவரை நாக்கூசும் வார்த்தையால் திட்டி தீர்த்து இருக்கிறார். மேலும், அவதூறாக பேசி இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன நதியா, வீட்டில் இருக்கையில் எலி விஷமருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து, அவரை மீட்ட உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நதியாவின் தாயார் இலட்சுமி இது குறித்து தெரிவிக்கையில், " எனது மகள் வேலை கேட்டு சென்றதற்கு திமுக நிர்வாகி வெளியே தள்ளி விட்டுள்ளார். மேலும், அவதூறாக பேசியிருக்கிறார். இதனால் எனது மகள் தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார் " என கண்ணீருடன் தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Mayiladuthurai Kuthalam DMK Admin Abuse Words Argue with Woman she Suicide Feeling sad