திடீரென வெடிச்சத்தம்.. ஏற்பட்ட நில அதிர்வு.. மயிலாடுதுறை மக்கள் அச்சம்..!
Mayiladuthurai Indian Army War Plane Air Clear Village Peoples Hear Sound and Feeling Fear
பயங்கர வெடி சப்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவன்குடி கிராமத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தாழ்வாக பறந்து உள்ளது. இதனையடுத்து பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்த நிலையில், மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அந்த கிராமம் வழியாக சென்ற இந்திய இராணுவ பயிற்சி விமானம், ஏர் கிளியர் செய்தபோது இந்த சத்தம் ஏற்பட்டதாகவும், மக்கள் இது தொடர்பாக அச்சமடையத் தேவையில்லையென்றும் வட்டாட்சியர் தெரிவித்ததையடுத்து, மக்கள் அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றனர்.
Tamil online news Today News in Tamil
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Mayiladuthurai Indian Army War Plane Air Clear Village Peoples Hear Sound and Feeling Fear