தர்மபுரியில் மாவோயிஸ்ட் தீவிரவாதி முல்லா கைது.!
Maoist terrorist Mullah arrested in Dharmapuri
மகாராஷ்டிர மாநிலம், பங்கரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லா. இவரது மகன் சீனிவாச முல்லா கெவுடு. இவர் மீது, தர்மராஜா காவல் நிலையத்தில் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பில் தொடர்பில் இருந்த இவர், தற்போது தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பம்பாடி அருகேயுள்ள பாரதி நகரில் விவசாயி ஒருவரது வீட்டில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தகவல் அறிந்த மகாராஷ்டிர காவல்துறையினர், இன்று அதிகாலை நேரத்தில் பாப்பம்பாடி அருகேயுள்ள பாரதி நகருக்கு சென்று பதுங்கி இருந்த சீனிவாச முல்லா கெவுடுவை கையும் கலவுமாக பிடித்து கைது செய்தனர்.
English Summary
Maoist terrorist Mullah arrested in Dharmapuri