#BigBreaking | சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்! நாளை கரையை கடக்கும் புயல்!
Mandous Cyclone chennai RED Alert
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு 520 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவல்படி, மாண்டஸ் புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை இரவு கரையை கடக்கும்.
இதன்காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
மேலும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மிக மிக அதிக கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக புயல் எதிரொலியாக நாளை தமீழகத்தின் 9 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Mandous Cyclone chennai RED Alert