செங்கல்பட்டு அருகே சோகம் - புதுமாப்பிள்ளையின் உயிரை பறித்த தின்னர்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி உறவினர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததனால், இவருடைய வீட்டில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்படுவது வழக்கமானதாக இருந்தது. அதன் படி கடந்த வாரம் மது போதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது போதையில் இருந்த மணிகண்டன் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வைத்திருந்த தின்னர் என்ற திரவத்தை எடுத்து குடித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு பதறியடித்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். போதையில் மது என்று நினைத்து தின்னரை மாற்றிக் குடித்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died for drink thinnar in sengalpat


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->