மின்னல் தாக்கி பலியான கூலி தொழிலாளி.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!
Man death due to lighting
சென்னை, மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மேலும், சொந்தமாக ஆடுகளை வளர்த்தும் விற்பனை செய்தும் வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குடைபிடித்து கொண்டு ஆடுமேய்த்த நிலையில் எதிர்பாராத விதமாக அவர் மீது மின்னல் தாக்கியது.
இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man death due to lighting