பிரிந்து சென்ற மனைவிகள்.. கேலி கிண்டல் செய்ததால் ஊர்காவல்படை வீரர் தற்கொலை..!
Man Committed Suicide Near Thirunelveli
இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்றதால் ஊர்காவல்படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜீன் (35). இவர் ஊர்காவல்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் நடந்து முதல் மனைவி பிரிந்து சென்றதால் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக இரண்டாவது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால், சுற்றி இருந்தவர்கள் அவரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதில், மன உளைச்சலுக்கு உள்ளான அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
Man Committed Suicide Near Thirunelveli