கடன் தொல்லையால் வருவாய் ஆய்வாளர் தற்கொலை.. காவல்துறை விசாரணை..!
Man committed suicide In Chennai
வருவாய் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, ஆவடி பகுதியை சேர்ந்தவர் பட்டாபிராம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். வருவாய் ஆய்வாளாரன இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடன் தொல்லையாலும், பதவி உயர்வு கிடைக்காததாலும் மன உளைச்சலில் இருந்த இன்று காலை அவரது அறையில் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அறைக்கு சென்ற அவரது மனைவி அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பதவி உயர்வு கிடைக்காததால் வருவாய் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man committed suicide In Chennai