வீட்டில் தனியாக இருந்த பெண்களை ஆபாசப் படம் எடுத்த இளைஞர் கைது...!
Man arrested in palayangottai
பெண்களை ஆபாசமாக படம் எடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பால்ராபிசன். இவர் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காலனி பகுதிக்கு அடிக்கடி சென்று வீட்டின் சுவர் ஏறிக் குதித்து பெண்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட ஆபாச வீடியோக்கள் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல அவர் அந்த காலணி பகுதிக்கு சென்று தனியா இருந்த பெண்ணை ஆபாச வீடியோவை எடுத்துள்ளார்.
இதனை கவனித்த அந்த பெண் கூச்சலிடவே அவர் அங்குள்ள புதரில் மறைந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்ததை ஒப்பு கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Man arrested in palayangottai